பெற்றோர்களே உஷார்!! அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா!! பயிற்சி மையம் மூடல்!!
தமிழகத்தில் கொரோனா 3 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனபடி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் மாணவர்களுக்கு, சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்குள்ள மாணவ, மாணவிகள் 235 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்தனர்.
இதில், 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மையத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பால் விடுதி மாணவ, மாணவிகள் சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தப்படுள்ளது. மேலும் வரும் 13-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்பு நடைபெறும் என மையத்தின் துணைப்பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!