இன்று முதல் 4 நாட்களுக்கு 7 மாவட்ட மக்களே உஷார்!! இடி மின்னல் சூறாவளியுடன் கனமழை!!

 
மழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மேலும் மழை நீடிக்கும் எனவும் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதில் மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

மேலும்  நாளை மறுநாள் ஜூலை 5,6 தேதிகளில் நீலகிரி,கோயம்புத்தூர்,திருப்பூர், தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை  வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமானது வரை  மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக  35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியசும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மழை
அதே நேரத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு குமரிக்கடல் , மன்னார் வளைகுடா, இலட்சத்தீவு , கர்நாடகா – கேரளா கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு,மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்,தென் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள்,வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில்  மணிக்கு 40 முதல் 60 கிமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web