சென்னை மக்களே உஷார்!! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு!! வெள்ள அபாய எச்சரிக்கை!!

 
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு!!

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பெரும்பங்கு செம்பரம்பாக்கம் ஏரிக்கு உண்டு. தமிழகத்தில் தொடர்ச்சியாக சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் அதன் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. இதனால்  உபரி நீர்  திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வினாடிக்கு 250 கன அடியில் இருந்து 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது

செம்பரம்பாக்கம் ஏரி

 இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரி சுமார் 6,300 ஏக்கர்  பரப்பளவு கொண்டது. இதன் முழு கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. கிருஷ்ணா நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து தினமும் கோடை மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் செம்பரம்பாக்கம்  ஏரிக்கு வினாடிக்கு 1,700 கனஅடி நீர்வரத்து உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், 23.60 அடியை எட்டி உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான 23 அடியை தாண்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 775 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்து விடப்பட்டதால் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் வசிப்பவர்கள், மேலும்  ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி
 அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரையோர பகுதி மக்களின் செல்போன்களுக்கு தமிழக அரசால் விழிப்புணர்வு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப  செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்துக்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றுவது  அதிகரிக்கப்படும். 2015 டிசம்பர் மாதத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால்  ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web