பிளாஸ்டிக் பை நிறைய மண்டை ஓடுகள்! தொடரும் மர்மம்! பயத்தில் மக்கள்!
இரண்டு பிளாஸ்டிக் பை நிறைய மண்டை ஓடுகள் சாலையில் கிடந்தது திருப்பூர் மக்களை பயத்தில் உறைய வைத்திருக்கிறது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே ஊதியூர், தாராபுரம் சாலையில் இச்சிப்பட்டி கிராமத்தில் காற்றாலைகள் உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இல்லாத இந்த பகுதியில், நேற்று இரு பிளாஸ்டிக் கவர்களில் மனித மண்டை ஓடுகளும், எலும்புத் துண்டுகளும் நிறைய இருந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊதியூர் போலீசார், அவற்றை கைப்பற்றினர். இதை யார் கொண்டு வந்து வீசிச் சென்றுள்ளனர் என எந்த விவரமும் தெரியவில்லை. கொலை போன்ற சம்பவம் நடந்து சடலங்களை மறைக்க கொண்டு வந்து வீசப்பட்டதா அல்லது பில்லி சூனியம் போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்தியவையா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் நத்தக்காடையூரில், கீழ் பவானி பாசன வாய்க்காலில் ஒரு மனித எலும்பு கூடு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல் கருக்கபாளையம் பிரிவில், வீட்டுமனைப் பிரிவில் இருந்த மேல் நிலைத்தொட்டியில் மனித எலும்புக்கூடு ஒன்றும், விலங்கு வேட்டைக்கு பயன்படுத்தப்படும் சுருக்கு கம்பிகளும் கிடந்தன. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருவது காங்கயம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!