13 வயது சிறுவனை சுட்டு கொலை செய்த போலீஸ்!! பீதியில் பொதுமக்கள்!!
அமெரிக்க போலீசாரால் 13 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவில் வயது வித்தியாசமின்றி அனைவரும் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு சுற்றுவதும், கண்மூடித்தனமாக துப்பாக்கிசூடு நடத்தி உயிர் பலிகளை ஏற்படுத்தி வருவதும் அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், பொது மக்களுக்கு துப்பாக்கிகளை வைத்துக் கொள்ள கடும் கட்டுப்பாடு விதித்தபோதும் பல்வேறு துப்பாக்கிசூடு சம்பவம் நடந்துவிடுகின்றன. இதனால் பல அப்பாவிகள் தங்கள் உயிரை இழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
மே மாதம் 25ம் தேதி தொடக்கப்பள்ளியில் புகுந்த மர்ம இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பள்ளி குழந்தைகள் பரிதாபமாக பலியான சம்பவம் உலகையே உலுக்கியது. இந்த அதிர்வலைகளை அடங்கும் முன்னரே மருத்துவமனையில் ஒருவர் 5 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. இதுபோன்ற கொடூர சம்பவங்கள் மீண்டும் நடைபெறக் கூடாது என்பதற்காக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் சாண்டியாகோ மாகாணத்தின் வார்கொல்ட் என்ற பகுதியில் கார் ஒன்று மர்ம நபர்களால் திருடப்பட்டு விட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து ரோந்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த காரை நிறுத்த முயற்சித்தனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீசாரின் ரோந்து காரில் பலமாக மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த ரோந்து போலீசார், அந்த கார் மீது பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் காரை ஓட்டிவந்த 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். அந்த காரில் மேலும் 2 சிறுவர்கள் இருந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
போலீஸ் துப்பாக்கிசூட்டில் இறந்த சிறுவன் ஓட்டி வந்த கார் வார்கொல்ட் பகுதியில் திருடப்பட்டது என போலீசார் உறுதிபடுத்தி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் போலீசார் கண்மூடித்தமாக துப்பாக்கிசூடு நடத்தி 13 வயது சிறுவனை கொன்றதற்கு பல தரப்பினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சட்டத்தை காப்பாற்ற வேண்டியவர்களே அதை கையில் எடுக்கலாமா? என்று பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!