பராமரிப்புக்காக இன்று விருதுநகரில் முக்கியப் பகுதிகளில் மின்தடை?!
அக்னி வெயில் முடிந்த நிலையில், இன்னும் சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் வெயில் உக்க்கிரமாகவே இருந்து வருகிறது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், வெயில் குறைந்தபாடில்லை. இந்நிலையில், இன்று பராமரிப்பு பணிகளுக்காக முக்கிய பகுதிகளில் மாலை வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் இன்று ராஜபாளையம் மின் கோட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ஜூன் 16ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்கோட்டத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ் காந்தி நகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!