குறை பிரசவம்! நயன்தாரா குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை! கவலையில் விக்னேஷ்சிவன்!

 
நயன்

குறை பிரசவத்தில் பிறந்துள்ளதால், உடல்நிலை சரியில்லாமல், நயன்தாராவின் இரு குழந்தைகளும் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நயன் - விக்னேஷ்சிவன் தம்பதியர் கவலையில், குழந்தையின் அருகில் இருந்து கவனித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில்  வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் விக்னேஷ் சிவன் செய்திருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

நயன்தாரா

அதில், அதில் தானும் நயன்தாராவும் அப்பா அம்மா ஆகிவிட்டோம். எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இரு குழந்தைகளும் ஆண் குழந்தைகள் என தெரிவித்துள்ளார். இந்த இன்ஸ்டா போஸ்ட்டை பார்த்த பலருக்கு ஒரே குழப்பம், ஜூன் 9-ம் தேதிதானே இருவருக்கும் திருமணம் நடந்தது, அதற்குள் எப்படி குழந்தை பிறப்பு என குழம்பிவிட்டனர்.

இந்த நிலையில்தான் அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சிலர் வாழ்த்து கூறிவந்தாலும், பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இவரது குழந்தைகள் குறைமாதத்தில் பிறந்த குழந்தை என தகவல் வெளியாகி உள்ளது. குழந்தைகள் இரண்டும் குறைமாதத்தில் பிறந்ததால் மருத்துவமனையில் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் நயன்தாரா ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web