நண்பனை போல் நடித்து இளம்பெண்ணை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை!! பகீர்!!

 
பாலியல் வன்கொடுமை

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில்  25 வயது இளம்பெண் ஒருவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தையுடன்  உள்ளது. இந்த குடும்பத்திற்கு சஞ்சய் சர்மா என்ற மந்திரவாதி  அறிமுகமாகினர். அந்த குடும்பத்தில் சஞ்சய் சில மாந்திரிக நடவடிக்கைகளை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் வீட்டில் தனியாக இருந்தார் . அந்த சமயம் பார்த்து  வீட்டிற்கு வந்த சஞ்சய் தனியாக இருந்த  இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். அத்துடன் இல்லாமல் இதனை வீடியோவாகவும் பதிவு செய்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் பறித்தும் வந்துள்ளான். 

பாலியல் வன்கொடுமை
இத்தோடு நில்லாமல்  அந்த பெண்ணை கடத்தி சென்று தனியாக ஒரு வீட்டில் அடைத்து வைத்தான். அவனுடைய நண்பர்கள் சிலரை கூட்டி வந்து அந்த பெண்ணுக்கு  மயக்க மருந்து கொடுத்து பல முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக அடுத்தடுத்து மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணை  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதற்கிடையில் மனைவியை காணவில்லை என குறிப்பிட்ட இளம்பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

போலீஸ்

அதன்படி செப்டம்பர் 27ம் தேதி அந்த பெண்ணை சஞ்சய் சர்மா போலீஸ் நிலையத்திற்கு வெளியே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டான். அந்த பெண் காவல்நிலையத்தில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதி, வன்கொடுமை குறித்து  போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அக்டோபர் 7ம் தேதி வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணுக்கு மயக்க மருத்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சஞ்சய் சர்மா மற்றும் அவனது நண்பர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. நண்பனை போல் பழகி அதே குடும்பத்து பெண்ணை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web