முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி!
தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி, தொலைபேசியில் நலன் விசாரித்தார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரபலங்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள், மருத்துவர்கள் என பாரபட்சமின்றி கொரோனா பரவி வருகிறது. அந்த வரிசையில் தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர் தற்போது உடல் நிலை சீராக்க காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வீட்டு தனிமையில் இருந்த நிலையில் நேற்று காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் பிரதமர் கேட்டறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!