இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு! 134 வாக்குகள் பெற்று புதிய அதிபரானார்
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வானார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள், எரிபொருள், மருந்து பொருட்கள் மற்றும் விவசாய இடுபொருட்கள் பற்றாக்குறையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு ஓடிய கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியிலிருந்து விலகினார். இதனையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் விக்ரமிசிங்கே பொறுப்பேற்றார். ஆனால், அவரும் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இத்தேர்தலில், தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அனுராகுமார திசநாயக, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்த டலஸ் அழகப்பெருமாள் ஆகியோர் போட்டியிட்டதால் மும்முனைப் போட்டி நிலவியது.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க அதிபராக நீடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன. இன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் முதல் முறையாக அந்நாட்டு சபாநாயகரும் வாக்களித்தார். இதனையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவைப் பெற்று ரணில் விக்ரமசிங்க அதிபராக வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்க அதிபரானார். இவர் 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை அதிபர் பதவியில் இருப்பார். டலஸ் அழகப்பெருமாவுக்கு 82 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அனுரா திசநாயக 3 வாக்குகள் மட்டுமே பெற்றார். 223 எம்பிக்கள் அளித்த வாக்குகளில் 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
இடைக்கால அதிபராக இருந்த ரணில் விக்ரமசிங்க முறைப்படி அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் 6 முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க 8-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்பிக்கள் ஆதரவு கிடைத்தாலும் மக்கள் ஆதரவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!