விபத்தில் பலியான பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம்!!

 
பிரியா

திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தில்  வசித்து வருபவர் தியாகராஜன். இவரது மனைவி சண்முகபிரியா (30). இவர் அவிநாசி சந்தைக்குச் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.திருமுருகன் பூண்டியில் இருந்து ஆத்துப்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் சண்முகபிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

விபத்து

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சன்முகபிரியாவின் கணவர் தியாகராஜன் மற்றும் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சென்ற தியாகராஜன், சண்முகபிரியா அணிந்திருந்ததாக கம்மல் மற்றும் தோடு ஆகியவை அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சண்முகபிரியா அணிந்து இருந்த தாலிக்கொடி மற்றும் மூன்றரை சவரன் செயின் எதுவும் இல்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து

இதனிடையே தண்ணீர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் ஒருவரை நேற்றிரவு கைது செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்த நிலையில், இன்று காலை அவரை அனுப்பி விட்டதாகவும் லாரி எங்கே இருக்கிறது என்றும் கைது நடவடிக்கை ஏன் மேற்கொள்ளவில்லை என்பது குறித்த தகவலையும் போலீசார் கூற மறுப்பதாகவும் நகைகள் காணவில்லை என்பதை எப்ஐஆரில் குறிப்பிட மறுப்பதாகவும் கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

இந்த விபத்தில் உள்ள சந்தேகங்களை போலீசார் தீர்க்கும் வரை உடலை பெற்றுக் கொள்ளப்போவதில்லை கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து மாயமான நகைகள் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் பணியில் இருந்த செவிலியர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web