அதிர்ச்சி! ஓபிஎஸ் பண்ணை வீட்டில் கொள்ளை!

 
ஓபிஎஸ்

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுகவின் துணை பொதுச்செயலாளருமான ஓபிஎஸ் க்கு சொந்தமான பண்ணை வீடு ஒன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைந்துள்ளது. இந்த வீட்டிலிருந்து கட்சி சம்பந்தப்பட்ட வேலைகளை கவனிக்கவும்,  பொதுமக்களை சந்திப்பதற்கும், முக்கிய நபர்களை சந்திப்பதற்கும் தனித்தனியாக அறைகள் உள்ளன. இந்த வீட்டின் மேல் தளத்தில் ஓபிஎஸ் ஓய்வெடுப்பதற்காக அறை அமைந்துள்ளது.

ஓபிஎஸ் வீடு

இந்த வீட்டிற்கு ஓபிஎஸ் அடிக்கடி வந்து செல்வதுண்டு. அந்த சமயத்தில் தனது ஆதரவாளர்கள் மற்றும்  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதும் வழக்கமாக இருந்து வருகிறது. 
இந்நிலையில் இந்த பண்ணை வீட்டில் நேற்று கொள்ளை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் பின்புற மதில் சுவர் மீது ஏறி  மேல் தளத்திலுள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

போலீஸ்

அந்த அறையில் நகை பணம் எதுவும் இல்லாததால் அங்கே மாட்டியிருந்த 54 இன்ச் டிவியை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web