சாலையின் நடுவில் திகுதிகுவென பற்றி எரிந்த ராயல் என்பீல்டு!! சென்னையில் பரபரப்பு!!

 
ராயல் என்பீல்டு

சென்னையில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகம். அதிலும் காலை நேரங்களில் அலுவலகம் செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என நெரிசல் பிதுங்கி வழியும். சாலைகளில் அந்த நேரங்களில் வாகனங்கள் படும் பாடு கேட்கவே வேண்டாம். வழக்கம் போல் இன்று காலையில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையில் இளைஞர் ஒருவர் தனது ராயல் என்பீல்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

ராயல் என்பீல்டு

அப்போது அவரது இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்ததும் கீழே இறங்கிய நிலையில், இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அருகில் இருந்த ஹோட்டலில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். 

ராயல் என்பீல்டு

விலையுர்ந்த பைக் தீயில் எரிந்ததால், அந்த வழியில் சென்றவர்கள் நின்று பார்த்து சென்றதால், அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறனர்.இந்த தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டிய இளைஞர் உடனடியாக வாகனத்திலிருந்து இறங்கியதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web