ஸ்.. அப்பாடா...!! சற்றே குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு!! இருந்தாலும் எச்சரிக்கையா இருங்க மக்களே!!

 
கொரோனா

இந்தியாவில் கொரோனா 3 வது அலை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 4 வது அலை ஜூனில் வரக்கூடும் என கான்பூர் ஐஐடி விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில வாரங்களாக இதற்கு ஏற்றாற் போல் இந்தியாவின்பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்றே அதிகரித்து வந்தது. குறிப்பாக  டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தினசரி கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில், மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

கொரோனா

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா தொற்று 4,518 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 3,714 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 049 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த கொரோனா பலி 5 லட்சத்து 24 ஆயிரத்து 708 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,513 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 33 ஆயிரத்து 365 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 26 ஆயிரத்து 976 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் 1,94,27,16,543 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 13,96,169 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்க சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web