சேலையில் தீப்பிடித்து பெண் பலி!! சமையல் செய்யும் போது பரிதாபம்!!

 
தீப்பிடித்து பலி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே கீழ்நேத்தப்பாக்கம் ஆற்றங்கரை தெருவில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன்.  இவரது மனைவி மனைவி காமாட்சி.இவருக்கு வயது 58. இவர் விறகு அடுப்பில் தான் சமைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

தீவிபத்து

அதன்படி காமாட்சி நேற்று வழக்கம் போல் விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்த போது அவர் அணிந்திருந்த சேலையில் திடீரென்று தீப்பற்றிக் கொண்டது. இதில் சேலை முழுவதும் எரிந்து, அவரது உடலிலும் தீப்பிடித்தது. வலியில் காமாட்சி அலறும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை காப்பாற்றினார்கள். பின்னர் தீக்காயமடைந்த காமாட்சி செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பின்னர்ர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போலீஸ்

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த காமாட்சி சிகிச்சை பலனின்றி துரதிருஷ்டவசமாக உயிரிழந்தார். இது குறித்து புகார் அளித்த கமாட்சியின் மகன் சாந்தகுமார் அளித்த புகாரை தூசி போலீசார் ஏற்றுக் கொண்டனர். அதன்படி சப் -இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web