சசிகலாவின் ரூ.15 கோடி சொத்துக்கள் முடக்கம்! வருமானதுறையினர் அதிரடி!

 
சசிகலா என்ன சொல்லப் போகிறார்?பரபரக்கும் அரசியல் வட்டாரம்!

பட்ட காலிலேயே படும் என்பார்கள். ஒரு காலத்தில் திரும்பின இடம் எல்லாம் சுக்கிர திசையாக இருந்த சசிகலாவுக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின் தொடர்ந்து சறுக்கல் தான். சிறை வாசம், அரசியலில் பின்னடைவும், போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டது, நம்பியவர்களின் துரோகம் என நிறைய காயப்பட்ட நிலையில், சசிகலாவின் 15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர்  முடக்கியுள்ளனர்.

சசிகலா, பினாமி பெயரில் ரூ.15 கோடி மதிப்பில் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் செயல்பட்டு வரும் சொத்துக்களை முடக்கும் பணியில், வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

ரஜினியை சந்தித்த சசிகலா! போட்ட ஸ்கெட்ச் என்ன?
சசிகலாவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 180 இடங்களில் கடந்த 2017ம் ஆண்டு வருமானவரித்துறையினர் அதிரடியாக சோனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதும், கணக்கில் வராத பல கோடி மதிப்பிலான சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து கடந்த 5 வருட காலமாக சசிகலாவின் பினாமிகள் யார் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் மூலம் வருமான வரித்துறையினர் பினாமிகளின் சொத்துக்களை முடக்கம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

களை கட்டும் தஞ்சாவூர்!! டிடிவி மகளின் திருமண வரவேற்பில் சசிகலா பங்கேற்பு!!
அதன்படி கடந்த 2019ம் ஆண்டு ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துக்களும், அதற்கு அடுத்தபடியாக ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப்பட்டன. இறுதியாக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சசிகலாவின் பங்களாவையும் வருமான வரித்துறையினர் அதிரடியாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

இதன் மூலம் மொத்தமாக ரூ.4,000 கோடி மதிப்பிலான பினாமி சொத்துகள் வருமானவரித் துறையினரால் முடக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள், சசிகலாவின் பினாமியால் பராமரிக்கப்பட்டு வரும் பினாமி சொத்து என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அதனை முடக்கும் பணியில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக காய் நகர்த்தி வருகிறார்கள். இதனால் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web