பயங்கரம்! ஒரு தலை காதல்! மாணவிக்கு 10 இடங்களில் கத்திக் குத்து! தேர்வெழுதிய பின் நடந்த சோகம்!

 
கேசவன்

பள்ளி மாணவி, தனது காதலை ஏற்காததால், தேர்வெழுதி முடித்து விட்டு, பள்ளியை விட்டு வரும் போது, 10 இடங்களில் கண்மூடித்தனமாக இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது திருச்சியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சாலையில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவி ஒருவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டம், மணப்பாறை அத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 16.மாணவி பள்ளியில் தேர்வை எழுதி முடித்து விட்டு நேற்று மாலை வீடுக்கு திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே திரும்பி கொண்டிருந்தார். 

அப்போது மாணவியை வழிமறித்த இளைஞர் ஒருவர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இவர்களுக்கு இடையேயான வாக்குவாதம் முற்றவே இளைஞர் ஒருகட்டத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென்று எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார். இதனால் வலி தாங்க முடியாத மாணவி அலறி துடித்தார்.

மணப்பாறை மாணவி

இவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் மாணவியை நோக்கி வரவே இளைஞர் அங்கிருந்து  தப்பியோடி தலைமறைவானார்.மாணவிக்கு கழுத்து, தோள்பட்டை, முதுகு என 10 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாணவியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதில், ‘‘கடந்த ஆண்டு செட்பம்பர் மாதம் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பொத்தமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கேசவன் என்ற 22 வயது இளைஞர் அழைத்துச் சென்றிருக்கிறார். 

இதனால் மகளை காணாமல் பதறிப்போன பெற்றோர் மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கவே, கேசவன் மீது போக்சோ பாய்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சிறையில் இருந்து சமீபத்தில் வெளியில் வந்த கேசவன், மீண்டும் மாணவிக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார். தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவர் போகும் வழியெல்லாம் வந்து தகராறு செய்துள்ளார். 

தேர்வு

இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாணவியை பின்தொடர்ந்து வந்த கேசவன் ‘‘என்னை கட்டிக்கலைன்னா ஏன் உயிரோட இருக்க, செத்துப் போ’’ என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 10 இடங்களில் மாணவியை குத்தி படுகாயப்படுத்திவிட்டு தலைமறைவாகி உள்ளார். கேசவனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பிளஸ்1 படிக்கும் மாணவியை, கேசவன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web