செம தில்லு! ஓடுற ரயிலில் போட்டோஷூட்! சீரியல் நடிகையின் அலப்பறை!

 
காவ்யா  அறிவுமணி

பாதை முடிந்த பின்னும் பயணம் முடியவில்லை’ என்று கவிதையாக சிலாகித்து, ஓடுற ரயிலில் போட்டோஷூட் செய்து அலப்பறை செய்து வருகிறார் பிரபல சின்னத்திரை நடிகை காவ்யா அறிவுமணி. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை காவ்யா, அறிமுகத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அடுத்தடுத்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலமாக அதிகளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, இன்ஸ்டாவிலும் ஆக்டிவ்வாக பதிவிட்டு வருகிறார். 

KaavyaArivumani

லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருந்த பிரபல சீரியல் நடிகை விஜே சித்ராவின் மரணத்திற்கு பின், அந்த கதாபாத்திரத்தில் காவ்யா இணைந்தார். விஜே சித்ராவின் ரசிகர்கள், காவ்யாவையும் அந்த கதாபாத்திரத்தில் கொண்டாடத் துவங்கினார்கள். 

சீரியலில் ரசிகர்களிடம் தனி கவனம் பெற்ற நடிகை காவ்யாவுக்கு சினிமாவிம் கம்பளம் விரித்திருக்கிறது. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கதவைத் தட்ட, மாஸ்டர் மகேந்திரனுடன் ‘ரிப்புபரி’  என்கிற படத்தில் நடித்து வருகிறார். த்ரில்லர் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தை திரையுலகின் தனது தொடர் வாய்ப்புகளுக்கு பெரிதும் நம்பி இருக்கிறார் காவ்யா.

சமீபத்தில் இவர் ரயிலில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார். படங்களைப் பார்த்து ஷேர் செய்து வரும் ரசிகர்கள், பார்த்தும்மா’ என புகைப்படத்துடன் அன்பையும் சேர்த்து பகிர்ந்து வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web