அதிர்ச்சி!! கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கியதில் 2 வீரர்கள் பலி!! பலர் படுகாயம்!!

 
கால்பந்து


ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் பனீலாட்டா என்ற பகுதியில் பெரிய விளையாட்டு மைதானம் ஒன்று அமைந்துள்ளது. அதில் நேற்று மதிய நேரத்தில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கால்பந்து

அப்போது திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. மின்னல் மின்னியதால் அதிர்ச்சியடைந்த வீரர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினார்கள். இருப்பினும் துரதிருஷ்டவசமாக மைதானத்தில் சட்டென மின்னல் தாக்கியது. இதில் 2 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 21 பேர் படுகாயமடைந்தனர். 

மின்னல் பலி

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போட்டி ஏற்பாட்டாளர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த வீரர்களை மீட்டு உடனடியாக ரூர்கேலா பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்த வீரர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. விளையாட்டு  மைதானத்தில் மின்னல் தாக்கிய கோர சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web