அதிர்ச்சி!! மோடியை கொல்ல சதித்திட்டம்!! பகீர் பிண்ணனி!!!

 
ஜலாலுதீன்

பிரதமர் மோடியை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே கடந்த 8ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். நாரா என்கிற மேற்கு ஜப்பான் பகுதியில் அமைந்துள்ள ரெயில் நிலையத்தின் அருகே மக்கள் முன்பு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே உரையாடிக் கொண்டு இருந்த போது மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லபட்டார். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமருக்கு பேஸ்புக்கில் மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மோடி

இந்நிலையில், பிரதமர் மோடியை கொலை செய்த சதித்தீட்டம் தீட்டிய மர்ம நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரதமர் மோடியை கொல்ல சதித் தீட்டியதாகக் கூறி ஜார்க்கண்ட் மாநில போலீசார் முகமது ஜலாலுதீனை பீகார் மாநிலம் பாட்னாவில் வைத்து அதிரடியாக கைது செய்தனர். 


போலீசார் பிடியில் இருக்கும் முகமது ஜலாலுதீனிடம் போலீசார் தீவிர விசாரணையில், ‘‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் வசித்து வருபவர் முகமது ஜலாலுதீன் கான். இவர் ஓய்வு பெற்ற காவலர் ஆவார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக் மற்றும் கிரதிஹ் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் காவல் துறையில் தொடர்ந்து 39 ஆண்டுகள் பணியாற்றி இவரின் நேர்மை மற்றும் கடமைக்காக பல நிலைகளில் பதவி உயர்வு பெற்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web