அதிர்ச்சி!! காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் மரணம்!!

 
பாலசுப்பிரமணியன்

தமிழகத்தில்  காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளருமான திரு. கே. பாலசுப்பிரமணியன் (எ) சேலம் பாலு மரணம் அடைந்தார். இவரது மறைவு குறித்து  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ட்வீட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளருமான திரு. கே. பாலசுப்பிரமணியன் (எ) சேலம் பாலு அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

rip


இவர் சிறுவயது முதலே மாணவர் காங்கிரசில் இணைந்து, காமராஜர் தலைமையை ஏற்று, தேசிய இயக்கத்தின் கொள்கை சார்ந்து தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். கட்சியின் செயல்பாடுகளில் கொள்கை முனைப்போடு செயல்பட்டு அறிவுசார்ந்த அணுகுமுறையின் மூலம் கட்சியின் வளர்ச்சிக்கு தீவிரமாக பாடுபட்டவர்.



கட்சிப் பணியே தமது வாழ்நாள் குறிக்கோளாக கொண்டவர். இவர்  வாழ்நாள் முழுவதும் சேவை மனப்பான்மையோடு பணியாற்றி வந்தார். இவரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web