அதிர்ச்சி! கேரளாவில் மீண்டும் நரபலி முயற்சி! பெண் சாமியார் கைது! மடத்தை சூறையாடிய பொதுமக்கள்!

 
ஷோபனா நரபலி

கேரளாவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியது கேரளாவில் நடைப்பெற்ற நரபலி பூஜை. இது குறித்தான புகாரில், தம்பதியர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கேரளாவில் மீண்டும் சிறுவர், சிறுமிகளை அடைத்து வைத்து அவர்களைப் பூஜைகளுக்கு பயன்படுத்திய பெண் சாமியார் ஷோபனா கைது செய்யப்பட்டுள்ளார். 

 கேரளா மாநிலம் பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாளபுழா பகுதியில் வசந்தி அம்மா மடத்தில் பெண் சாமியார் ஷோபனா (52) வசித்து வருகிறார். இங்கு கடந்த பல வருடமாக மந்திர செயல்கள் ஷோபனா தலைமையில் நடைபெற்று வந்துள்ளது. இந்த மந்திரவாதம் செய்யும் போது ஷோபனாவுக்கு தெரிந்த சிறுவர்- சிறுமிகளை பூஜைகளுக்குப் பயன்படுத்தி கொள்வது வழக்கம். 
நரபலி

அப்படி மந்திரவாதம் செய்யும் போது ஷோபனா, பூஜைகளுக்கு உதவி செய்ய வரும் சிறுவர்- சிறுமிகளை மயங்கி விழவும் வைத்து உள்ளார். மந்திரவாதத்தில் ஈடுபடும் போது இவர் பலத்த குரல் எழுப்பி சிறுவர்களை பயமுறுத்தி உள்ளார். ஷோபனாவின் பூஜைகள், மந்திரவாத நடவடிக்கைகள் குறித்து சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் யாரும் இதை அப்போது பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

தற்போது நரபலியில் ஈடுபட்ட தம்பதியர் கைதான நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெண் சாமியார் ஷோபனா மீது மீண்டும் பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பத்தினம்திட்டா போலீஸ் அதிகாரிகள் நேற்று பெண் சாமியார் ஷோபனாவின் மடத்துக்குள் நுழைந்து  ஷோபனாவிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சிறுவர்-சிறுமிகளை பூஜைகள், மந்திர தந்திரங்கள் செய்ய உதவியாக பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து பெண் சாமியார் ஷோபானா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் மடத்தில் இருந்த சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். 

நரபலி

இது தொடர்பாக பெண் சாமியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு உள்ளார்கள். அதனால் இந்த பெண் சாமியார் ஷோபனாவும், சிறுவர்-சிறுமிகளை நரபலி கொடுப்பதற்காக பூஜைகள் நடத்தினாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார்கள். பெண் சாமியார் ஷோபனா நடத்தி வந்த மடத்தை, அவர் கைது செய்யப்பட்ட பின்னர்,  பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் 

From around the web