அதிர்ச்சி! நடனமாடியபடி மேடையிலேயே உயிரிழந்த பிரபல நாடக கலைஞர்!

 
நாடக கலைஞர்

மக்கள் ஆர்வமுடன் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தத்ரூபமான வேஷம். நாடகத்தின் கதையால் ஈர்க்கப்பட்ட மக்கள் சுவாரஸ்யமாக அதில் லயித்திருந்தனர். சிவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் ராம்பிரசாத், தனது நடனத்தாலும், வசனங்களினாலும் மொத்த பார்வையாளர்களையும் தன் வசப்படுத்தி இருந்தார். அந்த பகுதியில், நாடக கலைஞர் ராம்பிரசாத்திற்கு ரசிகர்கள் அதிகம். ஆக்ரோஷமாக பாட்டுப் பாடிக் கொண்டே நடனமாடிக் கொண்டிருந்த நடிகர் ராம்பிரசாத் திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்து மயக்கமடைந்தார். 

முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல்கலாம் தொடங்கி, நாடக கலைஞர்கள், பாடகர்கள் உள்ளிட்ட சிலர் மேடையிலேயே தங்கள் உயிரை விட்ட சம்பவம் பல நம்மை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களின் தொழில் பற்றி குறித்தும் பலர் வியந்து பாராட்டியதும் உண்டு.

நாடக கலைஞர்

உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூரில் ராம்லீலா நாடகம் நடைபெற்றது. அந்த நாடகத்தில், ராம் பிரசாத் என்ற கலைஞர் சிவன் வேடம் அணிந்து ஆடிப் பாடி  நடித்துக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடனமாடிக் கொண்டிருந்த நடிகர் ராம்பிரசாத்  திடீரென மேடையிலேயே மயங்கி சுருண்டு விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொது மக்கள் மற்றும் சக நடிகர்கள் ராம்பிரசாத்தை உடனடியாக மீட்டு அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.’


ராம்பிரசாத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.  நாடக கலைஞர் ராம் பிரசாத் கீழே விழுந்து சரியும் வரை நடனமாடிக் கொண்டே இருந்தார். மக்களால் அதிகளவில் கொண்டாடப்பட்ட ராம்பிரசாத், நடித்துக் கொண்டிருந்த மேடையிலேயே  உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web