அதிர்ச்சி! 7 அடி ஆழத்தில் கள்ளச்சாராய கிணறு! அடி பம்பு வைத்து விநியோகித்த கும்பல்!

 
சாராயம்

விவசாய நிலத்தில், 7 அடி ஆழத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சி, அடி பம்பு வைத்து, விநியோகித்த கும்பலைக் கண்டு மத்திய பிரதேச போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

கள்ளச்சாராயத்தை வாங்கி அருந்தும் பலர் கண் பார்வை பறி போகி, உயிரிழக்கும் அவல நிலை பல மாநிலங்களில் இன்னமும் தொடர்ந்து தான் வருகிறது. இதனை தடுக்க போலீசார் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வரும் போதிலும் ஆங்காங்கே கள்ளச்சாராய விற்பனை களைகட்டிதான் வருகிறது.

இந்நிலையில் மத்தியபிரதேசத்தில் உள்ள குணா மாவட்டம் சஞ்சோடா, ரகோகர் ஆகிய 2 கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை ஜோராக நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு  வயல்வெளி பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதில் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

சாராயம்
வயல்வெளிக்கு நடுப்பகுதியில் கைப்பம்பு ஒன்று காணப்பட்டது. அந்த இடத்தில் ஏன் கைப்பம்பு வைக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அதனை இயக்கினார்கள். அப்போது அதில் இருந்து கள்ளச்சாராயம் அருவியாக கொட்டியது. இதனால் அதிர்ந்து போன போலீசார் இது எப்படி சாத்தியம்? என்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வயல்வெளிக்கு நடுவில் கள்ளச்சாராய பீப்பாய்கள் புதைக்கப்பட்டதும் அதன் மீது கை பம்பு பொருத்தப்பட்டு கள்ளச்சாராய கும்பல் விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் கைபம்பு இருந்த இடத்தில் தோண்டி பார்த்ததில் 7 அடி ஆழத்தில் பெரிய டேங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கள்ளச்சாராய கிணற்றில் பல்வேறு இடங்களில் காய்ச்சப்படும் சாராயத்தை கொண்டுவந்து சேகரித்துள்ளனர். பின்னர் கை பம்பு மூலம் அவற்றை மதுபிரியர்களுக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சாராயம்

கண்டெடுக்கப்பட்ட அந்த கிணற்றில் இருந்து ஆயிரக்கணக்கான லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், 8 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 7 அடியில் கிணறு அமைத்து அதன் மீது கைபம்பு பொருத்தி கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web