அதிர்ச்சி! பிரபல நடிகையுடன் கும்மாளம்!! நடிகர் நரேசை செருப்பால் அடிக்க பாய்ந்த மனைவி!!

 
நடிகர் நரேஷ்

தெலுங்கு திரையுலகில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வலம் வருபவர் நடிகர் சுரேஷ். இவர் மூத்த நட்சத்திர ஜோடியான கிருஷ்ணா& விஜயநிர்மலாவின் மகன், மேலும் தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ்பாபுவின் சகோதரர் என பல்வேறு சினிமா பின்புலம் கொண்டவர். ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நரேசுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

ஏற்கனவே 2 முறை திருமணமாகி உள்ள நரேஷ் 3வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. மேலும் இருவருக்குள்ளும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதான் தீரும் என்பது போல இவர்களின் விரிசல் தற்போது வாசல்தாண்டி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கீர்த்தனா

இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் நரேஷ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் நடிகை பவித்ரா லோகேஷ் ஆகிய இருவரும் ஹ§ன்சன் சாலையில் அமைந்துள்ள ஓட்டல் ஒன்றில் ஒரே அறையில் தங்கியிருப்பதாக ரம்யா ரகுபதிக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. நரேசுக்கும், ரம்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட நடிகை பவித்ராதான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஊர்ஜிதம் செய்யும் வகையில் ஒரே அறையில் தங்கியிருந்த இருவரையும் ‘ரெட் ஹான்டட்’ ஆக பிடிக்க ரம்யா ரகுபதி ஓட்டலுக்கு விரைந்தார்.

பலமுறை காலிங் பெல் அடித்தும் அறை கதவு திறக்கப்படாததால், அறையின் வாசல் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது ஓட்டல் நிர்வாகத்திற்கு தெரிய வரவே அவர்கள் ரம்யாவை சமானதாப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அது பலனளிக்காமல் போனது. அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் ஓட்டலுக்கு சென்று நடிகர் நரேஷின் மனைவி ரம்யாவை சூழ்ந்து கொண்டனர்.

இரவு முழுவதும் அறை வெளியில் நடந்து கொண்டிருந்த களேபரங்கள் எதையும் கண்டுகொள்ளாமல் காலை அறையில் இருந்து நடிகர் நரேசும், நடிகை பவித்ராவும் சாவுகாசமாக வெளியே வந்தனர். இதைப் பார்த்து கொதித்தெழுந்த ரம்யா கூச்சலிட்டபடியே தனது செருப்பை எடுத்து 2 பேரையும் அடிக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு சிரித்தபடியே நரேசு, ‘நீ மோசக்காரி பொய்க்காரி’ என்று கூறிவிட்டு நடனமாடியபடி விசில் அடித்துவிட்டு லிப்ட் வழியாக காரில் ஏறி 2 பேரும் புறப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரம்யா, ‘அரசியல் பின்புலம் இருக்கிறது என்று எண்ணி என்னை நரேஷ் 3வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் அது நடக்காமல் போகவே என்னை கழற்றிவிடபார்க்கிறார். எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். எனவே என் மகனுக்கு தாய் தந்தை என்ற இருவருமே தேவை. என்னை விவாகரத்து செய்ய நரேஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனக்கு இதில் எனக்கு உடன்பாடில்லை. இதை எதிர்த்து நான் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். நடிகை பவித்ரா என் மாமியாரின் வைர நெக்லசை சமீபத்தில் அணிந்திருந்திருந்தார். அதை என் மாமியார் கடந்த 2014ம் ஆண்டு வாங்கினார்’’ என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்து நடிகை பவித்ரா கூறும்போது, ‘‘நான் ஒரு நடிகை. எனக்கு தேவையான பொருட்களை என்னால் வாங்கிக் கொள்ள முடியும். தங்க நகைகள் மட்டுமல்லாமல், பிளாட், வீட்டு மனைகள் போன்ற சொத்துக்களையும் நான் வாங்கி இருக்கிறேன். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளது’’ என்று கூறினார்.
நடிகர் நரேஷின் குடும்ப பிரச்சினை வீதிக்கு வந்ததன் மூலம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேலும் நடிகை பவித்ராவை அவர் 4வதாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக பரவி வரும் செய்தி பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web