அதிர்ச்சி! குளிக்க சென்ற பிரபல நடிகர் நீரில் மூழ்கி மரணம்!

 
deepu

வீட்டின் அருகில் உள்ள கோவிலின் குளத்தில் குளிக்க சென்ற இளம் நடிகர், உதவி இயக்குநர் நீரில் மூழ்கி பலியானது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இரிஞ்சலகுடா பகுதியைச் சேர்ந்தவர் தீபு பாலகிருஷ்ணன் (41). இவர் மலையாள சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். 

மலையாளத்தில் வெளியான ‘உரும்புகள் உறங்கரில்லா’, ‘ஒன்ஸ் இன் மைன்ட்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக தீபு பாலகிருஷ்ணன் பணிபுரிந்துள்ளார். மேலும், ‘உரும்புகள் உறங்கரில்லா’ படத்தில் நடித்தும் உள்ளார்.

நேற்று  இவர் இரிஞ்சகுலடா பகுதியில் உள்ள கோவில் குளத்தில் குளிக்கச் சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது கோவில் குளக்கரையில் தீபு பாலகிருஷ்ணனின் உடை மற்றும் காலணிகள் இருந்துள்ளது. 

தீபு

இதையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கோவில் குளத்தில் நீண்ட நேரம் தேடுதலுக்குப் பிறகு தீபுவின் உடலை மீட்டனர். அவரது மறைவிற்கு மலையாளத் திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web