அதிர்ச்சி! பணத்தாசையால் பெற்ற மகளைக் கொன்ற தந்தை!

 
நரபலி

கடன் பிரச்சனை தீரும்... நிறைய பணம் சேரும் என்று பணத்தாசையால் பெற்ற மகளையே கண்களை கட்டிப் போட்டு தொடர்ச்சியாக மூன்று நாட்கள், உணவு, தண்ணீர் என எதுவும் கொடுக்காமல் உயிர் பலி வாங்கியிருக்கிறார் கொடுமைக்கார தந்தை. நரபலி கொடுகுஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் பவேஷ் அக்பரி. இவருக்கு தாரியா (14) என்ற மகள் உள்ளார். இவர் சூரத் பகுதியில் தங்கி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில், தந்தை பவேஷ் தனது மகளின் படிப்பை திடீரென நிறுத்தி, சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

கடந்த சில நாள்களாக பெரும் பண நெருக்கடியில் இருந்த பவேஷுக்கு , தாந்திரக மந்திர வேலைகளில் ஈடுபாடு இருந்துள்ளது. இதனால் கடன் மற்றும் வீட்டு பிரச்னைகளை தீர்க்க பவேஷுக்கு அவரது மூத்த சகோதரர் திலீப் விபரீத யோசனை கூறியுள்ளார். வீட்டில் இருக்கும் பெண் குழந்தை தாரியாவுக்கு பேய் பிடித்துள்ளதால் தான் குடும்பத்தில் இது போன்ற பிரச்சனை உள்ளது.

நரபலி

எனவே, தாரியாவுக்கு தந்திரீக பூஜை செய்தால் பிரச்னை தீர்ந்து விடும் என்ற விபரீத முடிவை எடுத்து படிப்பை நிறுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். பின்னர் கடந்த 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஆறு நாட்கள் விதவிதமான முறையில் பூஜை சடங்குகள் என்ற பெயரில் சிறுமிக்கு கொடுமைகள் செய்துள்ளனர். பழைய கந்தல் துணிகளை கொடுத்து அதை போட சொல்லி 2 மணி நேரம் தொடர்ந்து நெருப்பின் முன் நிற்க வைத்து வாட்டியுள்ளனர். 

பின்னர் கம்புகளை வைத்து அடித்து பேய் ஓட்டுவதாக தாக்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அருகே உள்ள கரும்பு காட்டிற்குள் அழைத்துச் சென்று நாற்காலி ஒன்றில் கட்டி போட்டு விட்டு, தொடர்ச்சியாக 3 நாட்கள் எந்த உணவும், தண்ணீரும் தராமல் பட்டினி போட்டுள்ளனர்.

தாரியாவின் சத்தம் வரக் கூடாது என வாய் மற்றும் கண்களையும் சேர்த்து இவர்கள் கட்டியுள்ளனர். இவ்வாறு 3 நாட்கள் சென்ற நிலையில், பட்டினி கிடந்தே கடந்த 7ம் தேதி அன்று சிறுமி தாரியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அறிந்ததும், உடலை எடுத்து அதிகாலை வேளையில் யாருக்கும் தெரியாமல் தந்தை பவேஷ், பெரியப்பா திலீப் ஆகிய இருவரும் சேர்ந்து எரித்துள்ளனர்.

நரபலி

இத்தனை சம்பவங்கள் நடந்த பின்னர் தான் சூரத்தில் வசிக்கும் சிறுமியின் தாய் வீட்டாருக்கு மகள் உயிரிழந்த கதையையே பவேஷ் கூறியுள்ளார். தாய் வழி தாத்தா வால்ஜீபாய் என்பவருக்கு சிறுமியின் மரணம் தொடர்பாக சந்தேகம் வர, இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிசிடிவிக்களை வைத்து விசாரணை மேற்கொண்டதில் இந்த உறைய வைக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் அம்பலமாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web