அதிர்ச்சி! 4 இந்தியர்கள் உள்பட 22 பேர் பயணம் செய்த விமானம் நடுவானில் மாயம்!
நேபாளத்தில் இருந்து 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உள்பட 22 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று திடீரென்று காணாமல் போய்விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நேபாளத்தில் இன்று காலை 9.55 மணிக்கு பொக்காராவில் ருந்து ஜோம்சோமுக்கு விமானம் ஒன்று பயணமானது. இந்த விமானம் தாரா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த விமானத்தில் 4 இந்தியர்கள் உள்பட 19 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
Nepal | The missing aircraft was hosting 4 Indian and 3 Japanese nationals. The remaining were Nepali citizens & the aircraft had 22 passengers including the crew: State Television
— ANI (@ANI) May 29, 2022
Aircraft with 22 persons, including 4 Indians, goes missing in Nepal
— ANI Digital (@ani_digital) May 29, 2022
Read @ANI Story | https://t.co/gpZw6EOwG1
#Aircraft #Nepal pic.twitter.com/OlbFkzVbQ8
இந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இன்று காலை 9.55 மணிக்கு இழந்துள்ளது. வானில் பறந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டு அறையுடன் கொண்டிருந்த தொடர்பை இந்த விமானம் இழந்துள்ளது.
Nepal | Tara Air's 9 NAET twin-engine aircraft carrying 19 passengers, flying from Pokhara to Jomsom at 9:55am, has lost contact: Airport authorities
— ANI (@ANI) May 29, 2022
இந்த விமானம் இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளதாகும். மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 ஜப்பானியர்கள் உட்பட மொத்தம் 22 பேர் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன என்பது குறித்து கேள்வியும், சோகமும் எழுந்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!