அதிர்ச்சி!! கேலி செய்த இளைஞரை கன்னத்தில் அறைந்ததால் முகத்தில் 118 தையல்கள்!!!

 
விபத்து

மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் உள்ள டி.டி. நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சந்தைக்கு சென்றுள்ளார். பைக்கை பார்க்கிங் செய்ய சென்றபோது அங்கிருந்த இளைஞர்கள் இவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அந்த இளைஞர்கள் அப்பெண்ணை கேலி செய்தும், ஆபாசமான வாரத்தைகளை கூறியும் விசில் அடித்து சேட்டை செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், கேலி செய்த இளைஞர்களில் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

விபத்து

அதன்பின்னர், வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை வழி மறித்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் அப்பெண்ணின் முகத்தில் பிளேடால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அப்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பிளேடால் முகத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு 118 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் குறித்து  பாட்ஷா பேக், அஜய் என்ற பிட்டி சிப்டே ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது குற்றவாளியைப் பிடிக்க தீவர தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தம்பதியரை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சைக்கு முழு உதவி செய்வதாக உறுதியளித்ததுடன், அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டி அவருக்கு ரூ. 1 லட்சத்தை வழங்கினார். இதுகுறித்து முதல்வர் கூறுகையில், அந்தப் பெண் மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார் என்றும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web