அதிர்ச்சி!! ஒரே நாளில் 23 ஆக உயர்ந்த கொரோனா பலி!!! சுகாதாரத்துறை எச்சரிக்கை!!

 
கொரோனா

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 3 மாதங்களுக்கு பின் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா தொற்று 12,847 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 13,216 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 793 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 23 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த கொரோனா பலி 5 லட்சத்து 24 ஆயிரத்து 840 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,148 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 90 ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 68 ஆயிரத்து 108 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் 1,96,00,42,768 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 14,99,824 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாளுக்கு நாள் கொரோனா தினசரி தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தனி கவனம் செலுத்தி தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசும், சுகாதாரத்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web