அதிர்ச்சி!! போதையில் பீர்பாட்டிலால் பேருந்தின் கண்ணாடி உடைப்பு!! சிறுவர்கள் அட்டகாசம்!!

 
சிறுவர்கள்

கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் மதுபோதையில் 4 சிறுவர்கள் நள்ளிரவில் சாலையில் அமர்ந்து அட்டகாசம் செய்துள்ளனர். போதை தலைக்கேறியதால் அந்த வழியாக சென்னை நோக்கிச் சென்ற அரசு பேருந்தை கையை காட்டி நிறுத்த முயன்றனர். ஓட்டுனர், சிறுவர்களின் நிலையை பார்த்து சுதாரித்துக் கொண்டதால் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 சிறுவர்களும் தாங்கள் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை வீசி அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

சிறுவர்கள்

இதில் பேருந்தின் பின் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்த பயணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து அலப்பறையில் ஈடுபட்4 சிறுவர்களையும்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கண்காணிப்பு கேமராவில் 4 சிறுவர்களும் நடுரோட்டில் அமர்ந்து கொண்டு செய்யும் சேட்டைகள் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறு வயதிலேயே மதுபோதையில் தள்ளாடி அரசு பேருந்துக்கு சேதம் விளைவித்து, அதன் மூலம் ஒரு பயணி காயமடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சிறுவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடத்தையை கவனிக்கத் தவறியதே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு காரணம் என்பது நிதர்சனமான உண்மை. சட்டங்களும், தண்டனைகளும் கடுமையாக்கப்பட்டாலும் சுய ஒழுக்கம் முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்திருக்க வேண்டும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web