அதிர்ச்சி!! லாரி மீது மோதிய கல்லூரி பேருந்து !! 13 மாணவிகள் படுகாயம்!!

 
விபத்து

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு எல்லையம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பெண்கள் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து கரூர் மாநகர் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக் கொண்டு திருச்செங்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது, கரூர் வெண்ணைமலை பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் பாம்பு ஒன்று கடந்து செல்வதை பார்த்த இரு சக்கர வாகன ஓட்டி நடு ரோட்டில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று விட்டார். 

விபத்து

அதனை தொடர்ந்து வந்த லாரியும் திடீர் பிரேக் போட்டு நின்ற நிலையில், பின்னால் வந்த தனியார் பெண்கள் கல்லூரி பேருந்து முன்னால் நின்ற லாரி மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தும், பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் முன் இருக்கை, கம்பிகளில் மோதியதில் 13 மாணவிகள் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

விபத்து

தகவல் அறிந்து அங்கு வந்த வெங்கமேடு போலீசாரும், பொதுமக்களும் காயமடைந்த மாணவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே தனியார் பெண்கள் கல்லூரி பேருந்து ஓட்டுநர் மகேஷ், மதுபழக்கம் உடையவர் என்றும் ஏற்கனவே அடிக்கடி விபத்தை ஏற்படுத்தியுள்ளார் என்றும் மாணவிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஓட்டுநரிடம் மாணவிகள் கேட்டால் விருப்பம் இருந்தால் பேருந்தில் ஏறு இல்லை என்றால் கீழே இறங்கு என மிரட்டுவதாக மாணவிகளின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web