அதிர்ச்சி!! இனி வரும் நாட்களில் 2 வேளை மட்டும் தான் உணவு!! பிரதமர் எச்சரிக்கை!!

 
இலங்கை

கொரோனா பரவலுக்கு பிறகு உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக் கொண்டுள்ளார். இவர்  பொருளாதாரத்தை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறார். 

இலங்கை கலவரம்
இருந்த போதிலும் அங்கு தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அந்த வகையில்  சமையல் கியாஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும் 3 நாட்களுக்கு எரிபொருள் சிலிண்டர் விநியோகம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து பிரதமர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை

அதில்  இனி வரும் நாட்களில் பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை உருவாகலாம். மேலும் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தீர்க்க பல்வேறு நாடுகளின் உதவிகள் நாடப்பட்டு வருகின்றன. இதற்கு மொத்தமாக சில பில்லியன் டாலர்கள் ஆகலாம். இதை திரட்டமுடியவில்லை எனில் இலங்கையின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகிவிடும். போதிய உரங்கள் இல்லாததால் விவசாய பணிகளை செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

தற்போதைய இருப்பு செப்டம்பர், அக்டோபர் வரை மட்டுமே போதுமானதாக இருக்கிறது. அதுவரை தான் நாட்டில் உணவு விநியோகம் நீடிக்கும். அதற்குள் பொருளாதார நெருக்கடி சீராகவில்லை எனில்  அதன்பிறகு பொதுமக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை உருவாகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web