அதிர்ச்சி வீடியோ! பிரபல பின்னணி பாடகர் மரணம்! மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே உயிரை விட்ட சோகம்!

 
எடவா பஷீர்

பிரபல மலையாள திரையுலகின் பின்னணி பாடகர், மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சம்பவம் மலையாள திரையுலகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மலையாள திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக திகழ்ந்தவர் எடவா பஷீர். இவருக்கு வயது 78. மலையாள மொழி படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார். இவர் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டிருந்தார் எடவா பஷீர்.

எடவா பஷீர்

இந்நிலையில் கேரளாவில் உள்ள ஆலப்புழையில் பத்திரப்பள்ளி என்ற இடத்தில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ‘ப்ளூ டைமண்ட்ஸ்’ என்ற இசைக்குழுவின் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பாடகர் எடவா பஷீர் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். அப்போது பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பாடிய இந்தி பாடல் ஒன்றை மேடையில் ரசித்து மெய் மறந்து பாடிக் கொண்டிருந்தார். யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் எடவா பஷீர் மேடையில் திடீரென்று மயங்கி கீழே சரிந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் எடவா பஷீரை விரைந்து அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், எடவா பஷீர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். எடவா பஷீருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மேடையிலேயே உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. அவரின் மறைவுக்கு மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


பாடகர் எடவா பஷீரின் உடல் ஆலப்புழையில் இருந்து அவருடைய சொந்த ஊரான கொல்லம் கடப்பக்கடாவுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு வைத்து அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

மேடையில் பாடிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்த பாடகர் எடவா பஷீரின் திடீர் மறைவால் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள், திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web