விஸ்வரூபம் எடுக்கும் ஸ்ரீமதி காதல் விவகாரம்!! சவுக்கு சங்கரின் பகீர் ஆதாரங்கள்!!

 
ஸ்ரீமதி


கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் நாட்டையே உலுக்கி வருகிறது. அதற்கான தீர்வு என்ன என்பது குறித்து மக்களும் சமூக ஊடகங்களும் நாளுக்கு நாள் புதுப்புது செய்திகளை பரப்பி வருகின்றனர். ஸ்ரீமதி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்கள் மூலம் பிரபலம் அடைய முயற்சித்து கைதான சம்பவங்களும் நாம் அறிந்ததே. வன்முறைக்காரர்களையும், இதை சாக்காக வைத்து பள்ளி உடமைகளை களவாடிய கள்வர்களையும் போலீசார் ஸ்கெட்ஸ் போட்டு தூக்கிய சம்பவமும் நடந்தேறியது. நாளுக்குநாள் ஸ்ரீமதி விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகள் எழுந்து வரும் நிலையில் யூடியூப்பர் சவுக்கு சங்கர் தனது சேனலில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஸ்ரீமதி

அதில், மாணவி ஸ்ரீமதி அதே பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மாணவி கொலை செய்யப்பட்டதற்கான வாய்ப்புகளே கிடையாது. தற்கொலை செய்து கொண்டதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்ற வகையில் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.


மேலும் அவர் கூறும்போது, ‘‘நான் விசாரித்த வரையில் பள்ளியில் உரிமையாளர் ரவி மிகவும் கறார் பேர்வழி. கடன் தொல்லை அதிகமாக இருந்ததால், பள்ளி கட்டண விஷயத்தில் மிகவும் கறாராக இருந்துள்ளார். மாறாக உரிமையாளர் ரவியின் அறையில் காண்டம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது பொய்யான தகவல். மாணவி தவறாக பயன்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

ஸ்ரீமதி உடன் படிக்கும் மாணவன் ஒருவரை காதலித்துள்ளார். மாணவன் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றும், மாணவி வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் உடன் பயிலும் மாணவிகள் கூறினார்கள். ஒரு கட்டத்தில் ஸ்ரீமதியின் காதல் விவகாரம் வீட்டில் தெரிந்துவிடவே பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக பள்ளி வாகனத்தில் பயணிக்கும் போது ஸ்ரீமதி எழுதிய கடிதத்தை டிரைவர் பார்த்து விட்டு ஸ்ரீமதியின் தாயிடம் புகார் கூறி இருக்கிறார்.

ஸ்ரீமதி

இந்நிலையில்தான் காதல் விவகாரம் மாணவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவருக்கும் தெரிந்துவிட்ட வருத்தத்தில் இருந்துள்ளார். எனவேதான் மாணவி உயிரிழந்துள்ளார். இது குறித்த உண்மைத்தன்மை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு மற்றும் போலீசார் மூலம் வெளிச்சத்திற்கு வரும்’’ என்று தெரிவித்தார்.

மாணவியின் விவகாரம் தற்போது காதல் விவகாரமாக மாறி உள்ளது. சிபிசிஐடி, போலீசாரும் இந்த கோணத்தில் இனி விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை கலக்கி வரும் மாணவி ஸ்ரீமதியின் விவகாரம் தற்போது காதல் பாதையில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web