சிக்னல் கோளாறு! மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்! பயணிகள் அவதி!

 
ரயில்

இன்று சென்னையில், சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக புறநகர் மின்சார ரெயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

நேரத்தை மிச்சப்படுத்தவும், செலவை குறைக்குவும் பெரும்பாலான பயணிகளின் தேர்வு மின்சார ரெயில்தான். சென்னை, தாம்பரம்,- செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பயணிகள் தினந்தோறும் பயணம் செய்து வருகின்றனர்.

ரயில்
இந்நிலையில் இன்று காலை மின்சார ரெயில்களின் இயக்கம் தொய்வு அடைந்தது. இது குறித்து விளக்கம் அளித்த தெற்கு ரெயில்வே அதிகாரிகள் சிலர் கூறும்போது, சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மழை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சீர் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.

ரயில்

ரெயில்கள் சிக்னல் கோளாறு காரணமாக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அதில் பயணித்த பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். மேலும் ரெயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்து வேறு போக்குவரத்தை நோக்கி படையெடுத்தனர். இதனால் ரெயில் நிலையங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேலைக்கு நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அங்கிருந்து புறப்பட்டு அவசர அவசரமாக பஸ் உள்ளிட்ட போக்குவரத்தில் பயணம் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web