பிரபல இசையமைப்பாளரை கரம் பிடித்த பாடகி அம்ரிதா சுரேஷ்!! குவியும் பாராட்டுக்கள்!!

 
பாடகி அம்ரிதா சுரேஷ்

தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான கோபி சுந்தர், பின்னணி பாடகி அம்ரிதா சுரேஷை திருமணம் செய்து கொண்டார். இந்த நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அம்ரிதா சுரேஷ்

பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர். தமிழில், யாருடா மகேஷ், தோழா, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மேலும் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவரும் பின்னணி பாடகி அம்ருதா சுரேசும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை சமூகவலைதளங்களில் டிரெண்டிடாக இருந்து வந்தது. இதன் இருவம் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்ற செய்தியும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

அம்ரிதா சுரேஷ்

இசையமைப்பாளர் கோபி சுந்தர் ஏற்கெனவே பிரியா என்பவருடன் திருமணமான நிலையில் கடந்த 2010 -ம் ஆண்டு அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் பாடகியான அபயா ஹிரன்மயி என்பவருடன் சேர்ந்து 9 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கோபிசுந்தர்& அம்ரிதா சுரேஷ் கடந்த சில மாதங்களாகவே டேட்டிங்கில் இருந்து வந்தனர் என்று கூறப்பட்டது. மேலும் இதை உறுதிப்படுத்தும் வகையில் இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகின.

பாடகி அம்ரிதா சுரேசுக்கும் நடிகர் பாலாவுக்கும் ஏற்கனவே திருமணமான நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் பிரிந்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சில மாதங்களாக டேட்டிங்கில் இருந்த கோபிசுந்தர் மற்றும் அம்ரிதா தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நட்சத்திர ஜோடிக்கு தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web