சிறப்பு ஊதிய உயர்வு!! ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட்!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சலுகை விலையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து 3 நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருந்தனர். அரசு விரைவில் பரிசீலிக்கும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டு பணிக்கு திரும்பினர். இதன் அடிப்படையில் நியாயவிலை கடை பணியாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை,சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு தீர்வுகளை பரிசீலித்து பரிந்துரைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
நுகர்வோர் கூட்டுறவு ஆணையத்தின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநரான பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.இந்த குழு தமிழக அரசு உத்தரவின் படி கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடை பணியாளர்களின் கோரிக்கைகளையும், தேர்வு நிலை, சிறப்பு நிலை,சிறப்பு ஊதிய உயர்வு முரண்பாடுகள் ஏதும் இல்லாத தீர்வுகளையும் அலசி ஆராய்ந்து பரிசீலித்தது.
இது குறித்த விரிவான பரிந்துரைகளை ஜூலை 31ம் தேதிக்குள் பதிவாளருக்கு அனுப்பிட வேண்டும் என கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ரேஷன்கடை பணியாளர்கள் சிறப்பு ஊதிய உயர்வு தொடர்பாக எழுத்துப்பூர்வ கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த எழுத்துப்பூர்வ கோரிக்கையை ஜூலை 14-க்குள் கூட்டுறவுத்துறை அமைத்த குழுவிடம் சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!