ஸ்டீல் வெடிகுண்டு வெடித்து தந்தை மகன் பலி!! இரும்பு பாத்திரத்தைத் திறந்ததால் பரிதாபம்!!!

 
ஸ்டீல் வெடிகுண்டு

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்தார்கள். அவர்கள் பழைய இரும்புப்பொருட்கள், பழைய பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கி தரம் பிரித்து விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தார்கள். இவர்களில் பசல் ஹக் என்ற தந்தையும், ஷஹீதுல் என்ற மகனும் அடங்குவர்.

bomb வெடிகுண்டு

இந்நிலையில், பசல் ஹக்கும், ஷஹீதுல்லும் தாங்கள் சேகரித்த பழைய பொருட்களை தரம் பிரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அதில் மூடியிருந்த இரும்பு பாத்திரம் ஒன்றை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த பாத்திரம் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பசல் ஹக்கும், ஷஹீதுல்லும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வெடி சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த பார்த்த போது தந்தையும், மகனும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மட்டனூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சிறுவன் பலி
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ‘‘வெடித்தது ஸ்டீல் வெடிகுண்டு என்பது தெரிய வந்துள்ளது. மேலும் இந்த இரும்பு பாத்திரத்தை பசல் ஹக்கும், ஷஹீதுல்லும் எந்த பகுதியில், யாரிடமிருந்து சேகரித்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பழைய பொருட்களை சேகரிக்கும் தொழிலை செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தந்தை, மகன் வெடி விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web