பணிநேரத்தில் இதை கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை!! மின்சார வாரியம் எச்சரிக்கை!!
தமிழக அரசு துறை வாரியாக பல அதிரடி மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்சாரத்துறை திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளைக் பின்பற்ற வேண்டும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் துறை வாரியாக பரிந்துரைக்கப்பட்ட ஆடைக் குறியீட்டை பின்பற்ற வேண்டும். அந்த வகையில்,மின்சார வாரிய பணியில் இருக்கும் போது பெண் ஊழியர்கள் சேலை, சல்வார், சுடிதாருடன் துப்பட்டா அணிந்து கொள்ளலாம்.
மின்சார வாரிய ஆண் ஊழியர்கள் பணி நேரங்களில் பார்மல் பேண்ட்,வேட்டி மற்றும் இந்திய கலாச்சார உடைகளை அணிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் பணி நேரத்தில் ஊழியர்கள் கேசுவல் உடைகளை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்ணியம்,ஒழுக்கம் இவைகளை பேணும் வகையில் பணிபுரிய வேண்டும்”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!