அசத்தல்!!! சர்வதேச பாரா துப்பாக்கி சுடுதலில் 3 வது தங்கம் வென்று இந்தியா சாதனை!!
சர்வதேச அளவில் பாரா உலக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் SH1 இல் இந்தியாவின் அவனி லெகாரா 250.6 என்ற உலக சாதனை புள்ளியுடன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தற்போது இன்று நடைபெற்ற பி6 - 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ் மற்றும் மணீஷ் நர்வால் ஜோடி சீன ஜோடியான யாங் சாவோ மற்றும் மின் லியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
பாரா உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரூபினா பிரான்சிஸ், மணிஷ் நர்வால் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். இந்த போட்டிகளில் இந்தியாவின் 3வது தங்க பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!