எக்ஸ்பிரஸ் ரயிலில் நள்ளிரவில் திடீர் தீ!! அலறி அடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்!!

 
ரயிலில் தீ

இந்தியாவில் தற்போது கொரோனாவிற்கு முந்தைய கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா செகந்திராபாத்தில் இருந்து தலைநகர் டெல்லிக்கு  தட்சண எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் நேற்று நள்ளிரவுக்கு பிறகு திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ரயில்
நேற்று இரவு  செகந்திராபாத்தில் இருந்து டெல்லிக்கு தட்சிண எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.  தெலுங்கானாவில் பகிடிப்பள்ளி அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அதில் லக்கேஜ்கள் ஏற்றப்பட்டிருந்த பெட்டியில் திடீரென தீப்பற்றியது. ரயிலின் ஏதோ ஒரு பகுதியில் இருந்து புகை வருவதை உணர்ந்த பயணிகள் ரயிலின் அபாய சங்கலியை பிடித்து இழுத்து நிறுத்தினர். ரயில் நின்றதும் பயணிகள்  இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

அக்னிபாத்  ரயில் எரிப்பு வன்முறை

இந்நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து லக்கேஜ் பெட்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள்  அந்த பெட்டியில் ஏற்றப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமாயின. அதன் பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.இந்த விபத்து பற்றி வழக்கு பதிவு செய்துள்ள ரயில்வே போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர  விசாரணை நடத்தி வருகின்றனர். பயணிகள் அனைவரும் தூங்கியபிறகு நள்ளிரவில் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அலறி அடித்து இறங்கினர். இதனால் அப்பகுதி முழுவதும் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web