தொடரும் அவலம்!! மசாஜ் செண்டர் பெயரில் பாலியல் தொழில்!! தட்டி தூக்கிய காவல்துறை!!

 
பாலியல்

சமீபகாலமாக தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து புகார்களும், குற்றச்சாட்டுக்களும் எழுந்து வருகின்றன. இதனை களையவும், கட்டுப்படுத்தவும் , சட்டத்தை மீறுபவர்களை உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் செயல்படுத்திவருகிறது. இருந்த போதிலும் போலியான ஆவணங்கள், போலி முகமூடிகள் அணிந்து  பொதுமக்களை ஏமாற்றும் வகையில் பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன.

மசாஜ்

அந்த வகையில் பள்ளிக்கரணை விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு சேலையூரில் அன்னை சத்யா நகர் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்ற ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது வினோத் மற்றும் மூர்த்தி ஆகிய 2 பேர் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 3 இளம் பெண்களையும் போலீசார் மீட்டனர்.

மசாஜ் ஸ்பா

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சேலையூர் பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்பட்ட தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web