சூப்பர்!! மருத்துவமனையில் காணாமல் போன பச்சிளம் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்பு!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரில் வசித்து வருபவர் யுனிஸ். இவர் அதே பகுதியில் கறிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி திவ்ய பாரதி நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 29ம் தேதி அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த திவ்யாபாரதி நேற்று அதிகாலையில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் யாரோ மருத்துவமனைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையை கடத்தி சென்றுள்ளனர். காலையில் கண்விழித்து பார்த்த திவ்ய பாரதி அருகில் இருந்த தனது குழந்தையை காணாமல் பதறி அழுது துடித்தார். இது குறித்த தகவலை உடனடியாக உறவினர்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து, உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த கோவை மாவட்ட போலீஸ் அதிகாரி நாராயணன், குழந்தை கடத்தப்பட்டது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டர். மேலும் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை தேட அதிரடி உத்தரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது, பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேற்கொண்டார். அதில், 2 பெண்கள் கட்டைபைக்குள் குழந்தையை கடத்திச் சென்ற காட்சிகள் பதிவானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக செயல்பட்டு பொள்ளாச்சியில் காணாமல் போன குழந்தையை கேரளா மாநிலம் பாலக்காட்டில் மீட்டனர். குழந்தை காணாமல் போன 24 மணி நேரத்தில் போலீசார் வேகமாக செயல்பட்டு குழந்தையை மீட்டதால் அவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது. மேலும் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட பெண்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!