கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த குழந்தை உயிரிப்பு!! காஞ்சிபுரத்தில் சோகம்!!!.

 
பவிஸ்கா

காஞ்சிபுரம் மாவட்டம்  ஸ்ரீபெரும்புதூர் அருகே பால் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். அவருடைய மனைவி ஷாலினி. இவர்களுக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மாலை குழந்தை பவிஸ்கா பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அவர்கள் பலகாரம் சுட்டு விட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் குழந்தை தவறி விழுந்துள்ளது.

பவிஸ்கா

இதில் தொடையில் பலத்த தீ காயம் ஏற்பட்ட குழந்தையை மீட்ட பெற்றோர்கள் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்  மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை  பவிஸ்கா  இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

காஞ்சிபுரம்

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த  ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் குழந்தையில்  பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை எண்ணெயில் தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web