இன்று ஸ்விக்கிக்கு தடை!! காவலாளியை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்!!
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 503 குடியிருப்புகள் கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு ஒடிசாவை சேர்ந்த பிரதீப்குமார் ராவத் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை, இங்குள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்வதற்காக ஸ்சுவிகி ஊழியர் ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்டில் சென்ற ஸ்சுவிகி ஊழியர், லிப்ட் சரிவர இயங்காததால் லிப்டில் உள்ள எமர்ஜன்சியை அழுத்தியதாக தெரிகிறது. ஆனால் நீண்ட நேரத்திற்கு பிறகே காவலாளி பிரதீப்குமார் சென்று ஸ்சுவிகி ஊழியரை வெளியே வரவழைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஸ்சுவிகி ஊழியர், அவரது 3 நண்பர்களுடள் சேர்ந்து காவலாளி பிரதீப்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஸ்சுவிகி ஊழியர் காவலாளியை தாக்கியதால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று ஸ்சுவிகி டெலிவரி செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!