தமிழக முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி!

 
ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின், காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால், தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் கடந்த 12ம் தேதி, அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

முதல்வர் இம்மாதம் 15, 16 தேதி கோவை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. அதே போல் அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமருக்கு 'செஸ் ஒலிம்பியாட் 2022'க்கான அழைப்பிதழை நேரில் கொடுத்து, அழைக்கவும் திட்டமிடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. 

ஸ்டாலின்

இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைகாக காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 3 நாட்களாக வீட்டுத்தனிமையில் இருந்த முதல்வர், சென்னை, காவேரி மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. முதல்வருக்கு காவேரி மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் இன்று மாலை பரிசோதனை முடிவுகள் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web