பயங்கரம்!! பிரபல ரௌடி தலை துண்டிக்கப்பட்டு படுகொலை!!

 
பாண்டி

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே செங்கமடை கிராமத்தில் வசித்து வருபவர்  பாண்டி என்ற முத்துப்பாண்டி. இவர் லோக்கல் தாதாவாக வலம் வந்தார். கட்டப்பஞ்சாயத்து, மிரட்டல், கொள்ளை, கொலை சம்பவங்களில் ஈடுபட்டு காவல்துறைக்கு தண்ணீ காட்டி வந்தார். இதுவரை இவர் மீது 3 கொலை வழக்குகளும் பல்வேறு கொள்ளை வழக்குகளும் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.

பாண்டி

இந்நிலையில் நேற்று இரவு வீட்டை விட்டு சென்ற பாண்டி மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனிடையே இன்று காலை செங்கமடை அருகே வயல்காட்டு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் கொலை செய்யப்பட்டு, தலை தனியாகவும், உடல் தனியாகவும் கிடப்பதாக திருவாடானை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவாடானை டி.எஸ்.பி நிரிஷ் மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

பாண்டி

விசாரணையில் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது பிரபல ரெளடி பாண்டி என்பது தெரியவந்தது. இவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பிரபல ரெளடி வெட்டி கொலை செய்யப்பட்டு, உடல் வேறு தலை வேறு என பிரித்து வீசிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web