பயங்கரம்!! ஆடு காணாமல் போனதால் ஆத்திரத்தில் நண்பர் சுட்டுக் கொலை!!
கோவை மேட்டுப்பாளையத்தில் காரமடையில் வசித்து வருபவர் சின்னசாமி. இவருக்கு வயது 58. இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். தினமும் ஆடு மேய்த்து அவைகளை பட்டியில் அடைப்பது இவரது வழக்கமான வேலை. வழக்கம் போல் நேற்றும் ஆடு மேய்த்து விட்டு திரும்பும் போது கிடையில் இருந்த 2 ஆடுகள் வழிதவறி விட்டது. அந்த ஆடுகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சின்னசாமி மிகுந்த மன வேதனை அடைந்தார்.
இந்த சோகத்தில் அவரது நண்பர் ரஞ்சித்துடன் மது அருந்தினார். இருவரும் போதையில் பேசி கொண்டிருந்த போது, திடீரென சின்னசாமி, தனது ஆடுகள் காணாமல் போனதற்கு ரஞ்சித் மீது பழி சுமத்தினார். இருவருக்கும் சண்டை நடந்தது. ஆத்திரத்தில் ரஞ்சித், சின்னசாமி இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட ஊர்க்காரர் அய்யசாமி இருவரையும் சமரசம் செய்து அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் ரஞ்சித்திற்கு ஆத்திரம் தீரவில்லை. போதை தலைக்கேறியதும் அவரது வீட்டிலிருந்த நாட்டு துப்பாக்கியால் சின்னசாமியை முதுகிலேயே சுட்டு கொலை செய்த பிறகு தனது வீட்டிற்கு சென்று தூங்கிவிட்டார். இச்சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து சின்னசாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. அத்துடன் போதை தெளிந்ததும் ரஞ்சித்தை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!