பயங்கரம்!! காதலியை ஓடும் ரயிலில் தள்ளி கொலை செய்த காதலன்!!

 
சத்யா

சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் ரயிலில் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் 23 வயதான சதீஷ்.  அதே பகுதியில் வசித்து வருபவர் 20 வயதான சத்யா . இவர்  தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். இன்று இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

சத்யா

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஆகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

சத்யா

இதை பார்த்த ரயில் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சதீஷ் எங்கு உள்ளார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியை காதலனே ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web